பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு மேற்கொண்டார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 20 April 2022

பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்

       கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்                  மாநகராட்சி மேயர் S.A.சத்யா                      அவர்கள்  ஓசூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது புறநகர் பேருந்து நகரப் பேருந்து நிறுத்தம் இடங்களையும் புறக்காவல் நிலையம், பொது சுகாதார வளாகங்கள் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடமும் பயணிகளிடமும் விவரங்களை கேட்டறிந்தார். 

தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வரும் சாலைகளில் உள்ள சாலையோர கடைகளையும் பார்வையிட்டு அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது ஓசூர் மாநகர துணை மேயர் C.ஆனந்தையா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad