கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம் செல்லகுமார் கலந்து கொண்டு பங்குபெற்ற மக்களிடையே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை குறித்து விவாதித்தனர் மற்றும் வந்திருந்த அனைவருக்கும் தேவையான மருத்துவ உபகரணங்கள் மருத்துவ உதவிகளையும் இதனிடையே திமுக கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரும் முன் காப்போம் திட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வரவேற்பு முகப்பில் வைத்திருந்தது சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் திமுகவினர் அகற்றிய பின் சுமுகமாக நடைபெற்றது. இருப்பினும் சலசலப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment