அரசம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளுக்கான தென்னை மரங்கள் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பகுதியில் ஐசிஎஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் இந்திய அரசு இணைந்து நடத்தும் சென்னை கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்னை வளர்ச்சி அலுவலர் சசிகுமார், வரவேற்புரையாற்றினார் மண்டல ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பையூர் பரசுராமன், மாவட்ட வளர்ச்சி அலுவலர் நபார்டு கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ஜெயபிரகாஷ், உதவி பேராசிரியர் பூச்சியியல் மண்டல ஆராய்ச்சி நிலையம் கோவிந்தன், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் மேலாண்மை அறிவியல் மையம் சுந்தர்ராஜ், தொழில்நுட்ப வல்லுநர் மண்ணியல் மேலாண்மை அறிவியல் மையம் குணசேகரன், தொழில்நுட்ப வல்லுநர் தோட்டக்கலை ரமேஷ் பாபு, தொழில்நுட்ப வல்லுனர் வேளாண் விரிவாக்கம் செந்தில்குமார், மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை வளர்ச்சியில் எப்படி சாகுபடி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment