சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 29 April 2022

சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் இருவர் கைது



கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கொடமண்டபட்டி அருகே மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக போச்சம்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் கொடமண்டபட்டி பாளேத்தோட்டம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது மாந்தோப்பில் இருந்து சிலர் போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்தனர் அதைக்கண்டு அவர்களைத் துரத்திப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திமுக நிர்வாகியும் கொடமண்டபட்டி முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்பவர் தலைமையில் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியது தெரியவந்தது இதில் சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரது மகன் மாணிக்கம் மாதம்பதி பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரது மகன் திருப்பதி என்கின்ற சேட்டு ஆகிய இருவரும் கைது செய்தனர் மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய திமுக நிர்வாகியும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சங்கர் கமலாபுரம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் செல்வம் மாடரஹள்ளி பகுதியைச் சேர்ந்த மாரி சரவணன் மற்றும் சிலரை தேடி வருகின்றனர் மேலும் அந்த சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒன்பது இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad