வேப்பனப்பள்ளியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை.பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயல்களிலும் குளம் குட்டை ஏரிகளில் நீர் நிரம்பியது. சில நாட்களாக வெப்பம் வாட்டி வைத்து வந்த நிலையில் இன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இந்த இப்பகுதியில் குளிந்த சீதோஷன நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2 மாதங்களாக தண்ணீரின்றி காய்ந்து கிடந்த ஏரிகள் குளங்கள் தற்போது இந்த மழையால் வேகமாக நிரம்பி இருப்பதால் இப்பகுதியில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment