தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 April 2022

தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் யுகேந்திரன் (வயது 21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி மாலை அவர் குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad