அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் உண்ணாவிரதம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 April 2022

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் உண்ணாவிரதம்

சூளகிரி அருகே 3000 ஏக்கர் நிலத்தில் 5 வது சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகமங்கலம்,உத்தனப்பள்ளி,அயர்ணப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 5வது சிப்காட் அமைக்க அரசு முயற்சித்து வருவதால் விளைநிலங்கள் பறிபோவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக K.P.முனுசாமி காலை 7 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad