தனியார் பள்ளி மாணவர்களுக்கு : இலவச இரத்த பரிசோதனை முகாம்; - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 April 2022

தனியார் பள்ளி மாணவர்களுக்கு : இலவச இரத்த பரிசோதனை முகாம்;

கிருஷ்ணகிரி அரசு ஆர்.சி.பாத்திமா துவக்கப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச ரத்தப் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது,, இதனை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் துவக்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி அரசு நிதி உதவிப் பெறும் ஆர்.சி.பாத்திமா துவக்கப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நம்பிக்கை அறக்கட்டளை, மொழி புவண்டேஷன் இணைந்து மாபெரும் இரத்தப் பரிசோதனை முகாமினை நடத்தினார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் இசையாஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்சத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலத்துக்கொண்டு மாணவர்களின் இலவச இரத்தப் பரிசோதனை முகாமினை துவக்கிவைத்தார்.
இதில் சுமார் 200-க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணகளுக்கு இனியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்த பரிசோதனைகள் 
மேற்கொண்டுடனர்

இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை இனியன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோனி, அமைப்பாளர் சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்துக்
கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad