தொடரும் மின்வெட்டு பொதுமக்கள் அவதி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 5 April 2022

தொடரும் மின்வெட்டு பொதுமக்கள் அவதி

போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பள்ளி மாணவர்கள் வங்கி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றியுள்ள பகுதிகளில் நாகரசம்பட்டி அகரம் மருதேரி நெடுங்கல் மோட்டூர் ஆவத்துவாடி இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது தினந்தோறும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் அன்று வெள்ளிக் கிழமை காலை மாதாந்திர பராமரிப்பு பணி சரிவர செய்யாதது இந்த தொடர் மின்வெட்டு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இந்த தொடர் மின்வெட்டு களால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் வங்கிகள் அலுவலகங்கள் செயல்பட முடியாத சூழல் உள்ளது எனவே தமிழ்நாடு மின்சார வாரியம் அகரம் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்காணிக்குமா? இதை கவனித்து மின்சாரத் துறை அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கிருஷ்ணகிரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சார்பில் தனது கோரிக்கை வைத்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad