கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தீர்த்தகிரிபட்டி ஏரியில் மர்மமான முறையில் ஒரு இளைஞர் இறந்து கிடப்பதாக இன்று காலை அங்குள்ள பொதுமக்கள் பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு உடனடியாக அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞன் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ராஜசேகர் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இவர் என்று அடையாளம் காணப்பட்டது இது குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் பர்கூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு இவர்கள் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் பருகூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்
No comments:
Post a Comment