கோடை மழையால் விவசாயம் பாதிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 April 2022

கோடை மழையால் விவசாயம் பாதிப்பு

சூளகிரி அருகே 

கோடை மழையால் விவசாயம் பாதிப்பு 


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வேப்பனப்பள்ளி தள்ளிய ராயக்கோட்டை ஓசூர் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கோடை மழை பெய்து வந்த நிலையில் சூழலில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்நிலையில் ஆலங்கட்டி மழையால் சூளகிரி அடுத்த வேம்ப்பள்ளி கிராமத்தில் சத்தியமூர்த்தி ,தேவராஜ் ,மோகன், கோவிந்தசாமி ,ஸ்ரீதர் ,சங்கர் , சக்திகுமார் ஆகியோரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட ராகி ,தக்காளி , மாபிஞ்சு, புதினா ,கோஸ் ,வாழை ,கொத்தமல்லி, முருங்கை உள்ளிட்டவை ஆலங்கட்டி மழையினால் சேதமடைந்துள்ளது
ஆலங்கட்டி மழையினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad