உள்ளூர் திருவிழாவிற்க்கு விடுமுறை அளிக்க மனு அளிக்கப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 April 2022

உள்ளூர் திருவிழாவிற்க்கு விடுமுறை அளிக்க மனு அளிக்கப்பட்டது

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கோவில் தேரோட்ட திருவிழாவிற்க்கு உள்ளூர் விடுமுறை விட கோரி மனு அளிக்கப்பட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிரசித்திபெற்ற பழமையான ஸ்ரீபேட்டராய ஸ்வாமி கோவிலில் தேர்திருவிழா வருகின்ற 13-04-2022,புதன் கிழமை நடைபெற உள்ளது.


தேர்திருவிழாவிற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்  தேன்கனிக்கோட்டை தாலுகா மக்களுக்கு மிக முக்கிய திருவிழாவாகும். வருடந்தோறும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த வருடமும் 13-04-2022, புதன் கிழமை தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக மனு அளிக்கப்பட்டது, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர்  உறுதி அளித்தார்.


நிகழ்ச்சியில் விஎச்பி நகர தலைவர் சோமசேகர், துணை தலைவர் நாகராஜ், நகர செயலாளர் பாலாஜி, பஜ்ரங்தல் நகர இணை அமைப்பாளர் சதிஷ் மற்றும் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad