11 காட்டு யானைகளை விரட்டி வனத் துறை விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 29 May 2022

11 காட்டு யானைகளை விரட்டி வனத் துறை விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளி அருகே

11 காட்டு யானைகளை விரட்டி வனத் துறை விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி*

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி 13 மகாராஜகடை, பதிமடுகு ஆகிய பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 11 காட்டு யானைகள் கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் மாறி மாறி முகாமிட்டு அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும் விவசாயிகளின் பயிர்கள் நாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்லவும் வனபகுதிக்கு ஆடுகள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லமால் இருந்து வந்தனர். மேலும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வனதுறையினர் பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில் காட்டு யானை அட்டகாசத்தை கட்டுபடுத்த தமிழக வனத்துறையினர் சார்பில் 30 பேர் கொண்ட வனதுறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து ஒரு மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதியில் தமிழக வனத் துறையினர் மற்றும் பட்டாசுகள், பானம் வெடிகள் வைத்து துரத்தினர். மேலும் மீண்டும் தமிழகப் பகுதிக்கு வராதவாறு தமிழக வனத் துறையினர் சார்பில் 30 பேர் கொண்ட குழு தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டி உள்ளதால் இப்பகுதியில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad