திமுக ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 May 2022

திமுக ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டப்பட்டது

ஒரு ஆண்டை நிறைவு செய்த திமுக தலைமையிலான தமிழக அரசு: ஒசூர் பேருந்து நிலையத்தில் மேயர் தலைமையிலான திமுகவினர் இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டம்

கடந்தாண்டு நடைப்பெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றார்..

1 வருடத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக அனைத்து சமூகத்தினர் அர்ச்சகராகலாம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் என பல்வேறு அதிரடிகளை மேற்க்கொண்டார்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்வதை திமுகவினர் கொண்டாடி வரும்நிலையில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர பேருந்து நிலையத்தில் ஒசூர் மாநகர திமுக பொறுப்பாளரும், வணக்கத்திற்குரிய மேயருமான S.A.சத்யா அவர்களின் தலைமையிலான திமுகவினர் பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்டோருக்கு இனிப்புக்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்த் ஐயா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன்,மாநில சிறுபான்மையினரின் பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், மண்டல தலைவர்கள் கண்ணன், ரவி, நகர அவைத்தலைவர் கருணாநிதி, நகர பொருளாளர் சென்னீரப்பா, E.G நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மஞ்சுளா முனிராஜ், யஷ்சஷ்வினி மோகன் உள்ளிட்ட 100க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றிருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad