மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 May 2022

மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் 

கிருஷ்ணகிரி,மே.8- கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி விநாயகர் லாட்ஜியில் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவரும் மாநில அமைப்புச் செயலாளருமான செங்கதிர் செல்வன் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளரும் மாநில இனைசெயலாளர் இரா.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.முருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜான் போஸ்கோபி ரகாஷ் கலந்துகொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாமோதரள்ளி, ஊராட்சியிலும் சூளகிரி ஒன்றியத்தில் பீர்ஜெபள்ளி ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர் ஊராட்சி செயலாளர்களை தாக்குவதும் மற்றும் தரக்குறைவாக பேசுவதும் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்து ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான ஊராட்சி செயலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad