கனமழைக்கு மின்கம்பம் மற்றும் தென்னை மரங்கள் சாய்ந்தது
அகரம் அருகே கனமழைக்கு மின்கம்பம் மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது இருளில் கிராம மக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள தட்டரஹள்ளி பிரிவு சாலையில் இன்று மாலை பெய்த காற்றுடன் கூடிய கனமழைக்கு முப்பதுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் புளிய மரக் கிளைகள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது இதில் தட்டரஹள்ளி-காரியமங்கலம் சாலை துண்டிக்கப்பட்டு மரங்கள் சாலையின் நடுவே உள்ளதால். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை மீட்டு மீண்டும் நடவு செய்யும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் சாலைகளை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் நாகரசம்பட்டி போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment