சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் மேற்க்கொள்ளும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்
ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை சாகச பயணமாக இயக்கி வரும் இளைஞர்களை கைது செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் முதல் சூளகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி முன் சக்கரத்தை (வீலிங்) உயர்த்தியபடி வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து ஓட்டி வருகின்றனர்.
மற்ற பயணிகளை இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால் சரியாக ஓட்டுபவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்திலேயே அதிக சாலைவிபத்துக்கள் ஏற்படும் பகுதி சூளகிரி என்கிற நிலையில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்டு வரும் சூழலில் இன்று சூளகிரி அருகே ஸ்கூட்டி வாகனத்தில் வீலிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது
No comments:
Post a Comment