வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமானதால் பொதுமக்கள் பீதி. கர்நாடக வனபகுதிக்கு விரட்ட வனதுறையினர் தீவர முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதிகளில் 11காட்டு முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி கிராமத்தில் வனப்பகுதி அருகே உள்ள நாகராஜ் என்பரின் மா மரங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்ததுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து வெவ்வேறு பகுதியில் கோட்டையூர், காரிகானப்பள்ளி, கொங்கனப்பள்ளி, எப்ரி பகுதிகளில் கடந்த 5 நாட்களாக விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் இந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் இப்பகுதியை பொதுமக்களும் கிராம மக்கள் விவசாயிகளும் பெரும் பீதியடைந்து வருகின்றனர். இந்த காட்டு யானைகளை கர்நாடக வனபகுதிகளுக்கு விரட்ட வனத்துறை சார்பில் 30 வனதுறை அதிகாரிகள் தற்போது கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் யானைகளை பின் தொடர்ந்து பானம் பட்டாசு வெடிகளை வைத்து யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தினம் தினம் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் இப்பகுதியில் விவசாயிகளும் பொதுமக்களும் அச்சப்பட்டு வருவதால் உடனடியாக யானைகளை விரட்டும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வனபகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் அதனை ஒட்டியுள்ள விளைநில பகுதிகளில் பொதுமக்கள் யாரும் இரவு நேரத்தில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது கர்நாடக பகுதிக்கு யானைகளை விரட்ட தீவிரமாக முயற்ச்சி செய்து வருகின்றனர் தமிழக வனத்துறையினர்.
No comments:
Post a Comment