*ஓசூர் பேருந்து நிறுத்தத்தில் பணம் திருடிய மூன்று நபர்கள் கைது*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த
அட்கோ காவல் நிலைய பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் 12.05.2022 ஆம் தேதி அவரது தோழிகளுடன் GRT பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த போது உமாமகேஸ்வரி அருகில் நின்று அவருடைய கைப்பையில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர் திருடி பக்கத்தில் இருந்த இரண்டு நபர்களிடம் கொடுப்பதை பார்த்த உமா மகேஸ்வரியின் தோழி சத்தம்போட்டு அருகிலிருந்தவர்களின் உதவியுடன் மூன்று பேரை பிடித்து அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
போலீசார் விரைந்து சென்று மூன்று நபர்களை கைது செய்தனர், உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில்தான் வழக்குப் பதிந்து அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்து மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment