வேப்பனப்பள்ளி அருகே சோகம். மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் விஷமருந்தி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சம்மாவின் மகள் பிரமிளா 33. இவருக்கும் கர்நாடக மாநிலம் கேம்மனள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் 43 என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மஞ்சுநாத் பிரமிளா இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரமிளா தனது ஊரான சிகராமகனப்பள்ளியில் அம்மா வீட்டிற்கு வந்து வாழ்ந்துள்ளார். ஓராண்டாக மனைவியை பிரிந்து இருந்த மஞ்சுநாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரமிளாவின் சிகரமாகனப்பள்ளி கிராமத்திற்கு வந்து தன் மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். மஞ்சுநாத்துடன் குடும்பம் நடத்த வர மறுத்த பிரமிளா மற்றும் அவரின் தாய் மஞ்சாம்மாள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் இதற்கிடையே நேற்று முன்தினம் மஞ்சுநாதை மனைவி மற்றும் மாமியார் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி குடும்ப நடத்த வராத விகர்த்தியில் நேற்று மாலை மஞ்சுநாத் வேப்பனப்பள்ளி குப்பம் செல்லும் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். நீண்ட நேரமாக மஞ்சுநாத் விழிக்கமால் இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை கண்டு வேப்பனப்பள்ளி விசாரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலிசார் அங்கு சென்று பார்த்தபோது மஞ்சுநாத் இறந்த நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.இதையடுத்து மஞ்சாநாதின் உடலை கைபற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வேப்பனப்பள்ளி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்ட விசாரணையில் மனைவிக்கும் இவருக்கும் குடும்பம் நடத்த வரமால் இருந்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் அருந்தி இருந்தது தெரியவந்ததுள்ளது. மனைவி குடும்பத்தின் வராததால் கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment