அரசம்பட்டி கிராமத்தில் தமிழக அரசு வருவாய் பேரிடர் மேலாண்மை முகாம்
_கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி கிராமத்தில் தமிழக அரசு வருவாய் பேரிடர் மேலாண்மை சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா மற்றும் நில சம்மந்தமான பிரச்சனைகளுக்கு கிராம அளவில் தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுவேந்திரன் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் வி.பி.சிவலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பாப்பா கண்ணன், கூட்டுறவு சங்கம் தலைவர் மற்றும் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.கே.கண்ணன், துணை தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மண்டல துணை வட்டாட்சியர் சிவசங்கரன் வரவேற்றார், நிகழ்ச்சிக்கு போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ கலந்துகொண்டு பொதுமக்களிடையே 26 மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டு அதில் முதல்கட்டமாக 10 மனுக்களுக்கு தீர்வளித்து பயனாளிகளுக்கு சான்றிதல் வழங்கினார், மேலும் மீதமுள்ள மனுக்களுக்கு உடனடியாக விசாணை செய்து பட்டா வழங்க உத்தரவிட்டார். இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் லில்லி சாந்தி, கிராம உதவியாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். முகாம் நிறைவில் கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் நன்றியுரை வழங்கினார்._
No comments:
Post a Comment