பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ஆர்.ரங்கநாதன் கலந்து கொண்டார். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 May 2022

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ஆர்.ரங்கநாதன் கலந்து கொண்டார்.

புளியம்பட்டி ஊராட்சியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ஆர்.ரங்கநாதன் கலந்து கொண்டார். 


கிருஷ்ணகிரி, மே. 8- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் கீழ் மைலம்பட்டி, திப்பனூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மறு கட்டமைப்பு கூட்டமைப்பு 
கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர். ரங்கநாதன், தலைமை தாங்கினார். இதில் புளியம்பட்டி தலைமை ஆசிரியர் தணிக்கையாளர் கஸ்தூரி, திப்பனும் தலைமையாசிரியர் கீதாதேவி, கீழ்மைலம்பட்டி தலைமையாசிரியர் பஞ்சவர்ணம், ஆசிரியர் பயிற்றுநர் நந்தகுமார், வார்டு உறுப்பினர் ஜோதிலட்சுமி திபநாதன், பெருமாள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
கீழ்மைலம்பட்டி தலைவராக சித்ரா, துணைத்தலைவராக தீபா உள்பட 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல் திப்பனுர் பள்ளி மேலாண்மை குழு தலைவராக சுமதி, துறைத்தலைவராக ரமணி உள்பட 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad