சூளகிரி அருகே
உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர்களுக்கு உணவு :
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் அனுதினமும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சூளகிரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு.சம்பத்ககுமார் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர்கள் , ஏழைகளுக்கு 1392 தினமாக இலவசமாக தினமும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஆதரவற்றோர்களுக்கு இலவச உணவு வழங்கி வரும் உயிரூட்டல் அறக்கட்டளையை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment