வேப்பனப்பள்ளி அருகே பெண் மாயம் : போலீசார் தீவிர விசாரணை: - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 May 2022

வேப்பனப்பள்ளி அருகே பெண் மாயம் : போலீசார் தீவிர விசாரணை:



*வேப்பனப்பள்ளி அருகே பெண் மாயம். போலீசார் தீவிர விசாரணை*

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷின் (கூலி தொழிலாளி) அவரின் மனைவி வசந்தா 26. திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதன் பிறகு 2 ஆம் தேதி கணவர் தொடர்புகொண்டபோது மனைவி அம்மா வீட்டுக்கு செல்லவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி விசாரித்தபோது மனைவியை காணவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் மனைவி காணவில்லை என புகார் அளித்தார். சுரேஷின் புகாரின் அடிப்படையில் வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பெண் திடீரென்று மாயமான சம்பவம் இப்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad