உத்தனப்பள்ளி ஊராட்சியில்
சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் : தலைவருக்கு குவியும் பாராட்டுகள் !
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி ஊராட்சியில் போதிய கழிவுநீர் கால்வாய்கள் இன்றி மழை நாட்களில் அதிக அளவில் கழிவுநீரில் மழைநீர் கலந்து ஆறாக ஓடுவதாகவும் பொதுமக்கள் மிக சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது .
உத்தனப்பள்ளி ஊராட்சியில் நீண்ட நாள் கோரிக்கையாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கையாக முன் வைத்தனர்.
கோரிக்கைகளை ஏற்ற உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மிகாந்த் தன் சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் பணிகளை மேற்க் கொண்டு வருகிறார் .
தன் சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருவதை கண்டு உத்தனப்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment