சூளகிரியில்
கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லபள்ளியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
சூளகிரி அருகே உள்ள கொல்ல பள்ளியில் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட அமைப்பாளருமான பாக்யராஜ் தலைமையில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் பிறந்த நாளை ஒட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment