வேப்பனப்பள்ளி அருகே வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு பச்சைமலை முருகன் கோயிலுக்கு சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவிலில் வைகாசி மாத விசாக விசேசத்தை முன்னிட்டு பச்சைமலை முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை முதலே சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் மூலம் நெய்வேதியம், பால் அபிஷேகம், திருநீர் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி பக்தர்களுக்கு அளித்தார். இந்த விசேஷ பூகையில் கடவரப்பள்ளி, காரகுப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment