*சூளகிரி அருகே கணவரை கட்டையால் தாக்கி கொன்ற மனைவி மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்*
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சுண்டேட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் என்பவருக்கு திருணமணமாகி யசோதா என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ள நிலையில்
வெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மனைவி யசோதாவிடம் அடிக்கடி மது அருந்தி தகாத வார்த்தைகளால் தகராறு செய்வதாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வெங்கட்ராஜ் என்பவர் குடித்து தனது மனைவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்குவாதம் அதிகமானதால் மனைவி யசோதா மற்றும் மகள் சுஷ்பிதா இருவரும் கட்டையால் வெங்கடராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இரத்த காயத்தால் மயங்கிய நடராஜா அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் வெங்கட்ராஜ் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
வெங்கட்ராஜ் இன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வெங்கட்ராஜ் மனைவி யசோதா மகள் சுஷ்பிதா சூளகிரி போலீசார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment