சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை நான்கு ரோடு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ₹1,060 பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுப்படுபவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர்
No comments:
Post a Comment