வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தலப்பள்ளி பஸ் நிலையம் அருகே அட்கோ போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹3,84,396 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் வெளிமாநில மதுபான பாக்கெட்கள் இருந்தது.வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள், மதுபானங்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment