கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இயங்கி வரும் அன்னையின் பாதை அறக்கட்டளை சார்பில் சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன சூளகிரி கிளை வளாகத்தில் அறக்கட்டளை குழுவின் ஆலோசனை படி சூளகிரி வட்டார வாகன ஓட்டிகளுக்கும் , பொதுமக்களுக்கும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் பொதுமக்களுக்கு இரத்த வகை கண்டறியுதல் , இரத்த அழுத்த பரிசோதனை, ஐசிடிசி பரிசோதனைகள்,பொது பரிசோதனைகள் பார்க்கப்பட்டது இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
இந்த மருந்துவ முகாமில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன குஷி கிளினிக் மருத்துவர் புஷ்பா, மேனேஜர் சுப்ரமணி, ஆலோசகர் சத்தியமூர்த்தி, செவிலியர் வனிதா, மற்றும் ஜேசிஐ சூளகிரி, அன்னையின் பாதை அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர்.நாகராஜ், துணைத்தலைவர் டாக்டர். விஜய்குமார் , செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர், சுப்ரமணி , துணை செயலாளர் லோகேஷ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் யுவன் சங்கர், சின்னராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment