சட்டவிரோதமாக வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது. குட்கா பொருட்கள்,வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
17.09.2022
தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கலுகொண்டபள்ளி செல்லும் வழியில் உள்ள கணமனபள்ளி கிராமம் ரச்சை அருகில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹60,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து குட்கா பொருட்கள், வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment