கிருஷ்ணகிரி போலி பத்திரிக்கையாளர்களுக்கு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை பத்திரிக்கையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். -- மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கடும் எச்சரிக்கை.
ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போலி பத்திரிக்கையாளர் என்ற பெயரில் போலி அடையாள அட்டையுடன் மோசடியில் ஈடுபடுவதாக புகார். உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி பொதுமக்களிடம் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து பணம் பறிக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், போலி பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 94980 42433 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். - மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.
No comments:
Post a Comment