சட்டவிரோதமாக குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது. குட்கா பொருட்கள்,வாகனம் பறிமுதல்
கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓலப்பட்டி கூட்ரோடு அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹14,850/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள், வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment