சூளகிரியில் அதிக சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றி வரும் 108 ன் 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் பெரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 108 -ன் 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை உதவி மையம் செயல்ப்பட்டு வருகிறது.
தமிழகத்திலே அதிக சாலை விபத்துகள் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தான் நடைப்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலுமலை காணவாய் முதல் கோபசந்திரம் வரை மிக ஆபத்தான வளைவுகள் மற்றும் ஏற்றம் இறக்கமாக சாலை அமைந்துள்ளது. சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மாதத்திறக்கு குறைந்தபட்சம் 200 கற்கும் மேற்பட்ட விபத்துகள் நடைப்பெற்று வருகிறது இதில் உயிரிப்புகளே அதிகம் . இந்நிலையில் சூளகிரி அமைந்துள்ள 108 ன் 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் 3000 மேல் விபத்தில் சிக்கியவர் மீட்டு மறுவாழ்வு அளித்த மையத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment