வேப்பனப்பள்ளி அருகே டன் கணக்கில் தக்காளிகளை ஆற்றில் கொட்டி சென்ற விவசாயி
தக்காளி விலை கடும் சரிவால் விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியிலிருந்து தக்காளி சாகுபடி தமிழகத்தில் சென்னை, திருச்சி மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் தக்காளி வரத்து அதிகம் காரணமாக தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை மட்டுமே விற்ப்பனை செய்யப்பட்டு வருகிறது. 15 கிலோ கொண்ட கூடை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்க்கப்பட்டு வருகிறது.
தக்காளியை விவசாயம் செய்த பணம் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கடுமையாக நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தக்காளிகளை அறுவடை செய்யமால் தோட்டத்திலியே விட்டு ஆடுமாடுகளுக்கு உணவாகி வருகிறனர்.
இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் இன்று காலை தனது தக்காளி தோட்டத்திலிருந்து தக்காளிகளை சாகுபடி செய்து கிருஷ்ணகிரி உள்ள தக்காளி சந்தைக்கு விற்க சென்றுள்ளார். அங்கு தக்காளியை விற்க முடியாமல் வேதனை அடைந்த விவசாயி வீடு திரும்பி வெங்கடேசன் நாச்சிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள மார்க்கண்டேயன் நதியில் சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்றார். விவசாயின் இந்த செயல் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்று பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தக்காளி விலை கடும் விலை சரிவால் தக்காளியை விற்க முடியாமல் டன் கணக்கில் ஆற்றில் கொட்டி விவசாயி வேதனையுடன் வீடு திரும்பிய செயல் பகுதியில் விவசாயிகளையும் பொதுமக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment