உத்தனப்பள்ளி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 28 April 2023

உத்தனப்பள்ளி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

சூளகிரி எடுத்த உத்தனபள்ளி காவல் நிலையம் உட்பட்ட சினிகிரிப்பள்ளி கிராமத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிவெங்ட்டப்பா இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் இவரது பேரன் கேசவ மூர்த்தி என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன வேதனை அடைந்த முனி வெங்கடப்பா சினிகரிப்பள்ளி -  அகரம் சாலையில் உள்ள தனிநபருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலை அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் இறந்த முனிவெங்கடப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த தற்கொலை சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad