சூளகிரி அருகே சாலையோர கால்வாயில் ஆண் சடலம் மீட்பு! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 28 April 2023

சூளகிரி அருகே சாலையோர கால்வாயில் ஆண் சடலம் மீட்பு!

சூளகிரியை அடுத்த கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலை அருகே கால்வாய் உள்ளே இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு, உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையோரமாக உள்ள கால்வாய் உள்ளே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதாக சூளகிரி போலீசாருக்கு கோபசந்திரம் கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூளகிரி போலீசார் கால்வாய் உள்ளே இறந்து கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோபசந்திரம் கிராம சாலையோர கால்வாய் இறந்த கிடந்த நபர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad