சூளகிரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் ,
நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசானைகளை உடனடியாக ரத்து செய்திடவும்,
அரசு துறைகளில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment