சூளகிரியில் குப்பை கழிவுகளை அகற்றிய போலீசார்! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 May 2023

சூளகிரியில் குப்பை கழிவுகளை அகற்றிய போலீசார்!

சூளகிரியில் போக்குவரத்து இடையூறாக இருந்த குப்பை கழிவுகளை JCB இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி செய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள இராயக்கோட்டை சாலையில் அருகே அமைந்துள்ள மேம்பால பகுதியில் பல மாதங்களாக குப்பைகள் தேங்கியும் துர்நாற்றம் வீசியும் , போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்துக்கும் , பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த குப்பை கழிவுகளை போலீசார் முன் வந்து JCB இயந்திரம் மூலம் சுத்தம் செய்தும் சீரமைப்பு பணி செய்தும் போக்குவரத்து இடையூறாக இருந்த பகுதிகளை சீரமைத்த போலீசாருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad