கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதிகா தலைமை தாங்கினார். ஆடிட்டர் லோகநாதன், பழ.பிரபு, உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிஏ படிப்பு சம்பந்தமான மாபெரும் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி ஐசிஏஐ சார்பில் சிசிசி மூலமாக சிஏ படிப்பதால் ஏற்படும் நன்மைகள், எங்கு படிக்கலாம், அதற்கான கல்லூரி கட்டணம், சிஏ படிப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றை பற்றி ஆடிட்டர் சிஎ ஜெய்சுதா லோகநாதன் மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் பிரிஜிட் ரீட்டா மேரி, சுகுணாம்பிகை, விஜயலட்சுமி, ஆசிரியர்கள் பூங்கொடி, லாவண்யா, அலுவலர்கள் மற்றும் 300க்கும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் மாணவிகள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு சிஎ ஜெய்சுதா லோகநாதன் தெளிவான விளக்கம் அளித்தார்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ்.சத்தியநாராயணன்.
No comments:
Post a Comment