தனிமையில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தும் பாலியல் ஈடுபட்ட நபரை கைது செய்த சாமல்பட்டி காவல்துறையினர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 September 2023

தனிமையில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தும் பாலியல் ஈடுபட்ட நபரை கைது செய்த சாமல்பட்டி காவல்துறையினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்தில் கவுத்து காரன்கோட்டை பகுதியில் அதிகாலை ஐந்து மணி அளவில் தனிமையில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் காட்டி அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நபரை தேடி வந்த காவல்துறையினர் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மடத்தானூர் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் என்பவரின் மகன் முருகன் என்பவரை பாரூர் அருகே ஜாதிநாயக்கன்கொட்டாய் பகுதியில் ஒளிந்து இருப்பதை தெரிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை உட்கோட்ட காவல் குற்ற புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்தனர்.


அவரை சாமல்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்து  வந்ததை ஒப்புக் கொண்ட முருகன்,  முருகன் அளித்த வாக்குமூலம் பெற்று இன்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad