ஊத்தங்கரை அருகே குட்கா கடத்திய கார் கவிழ்ந்து விபத்து - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 22 September 2023

ஊத்தங்கரை அருகே குட்கா கடத்திய கார் கவிழ்ந்து விபத்து

ஊத்தங்கரை அருகே தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாய்கனூர் பிரிவு ரோட்டில் நேற்று நள்ளிரவு வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த  கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 



விடியற்காலை அந்த பகுதியில் உள்ள மக்கள் கார் குறித்து சிங்காரப்பேட்டை போலீசுக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட 12 சிப்பம் குட்கா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டி ஓட்டி வந்த டிரைவர் மாயமானார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad