அதிமுக சார்பில் படப்பள்ளி பூத் கமிட்டியின் பூத் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 22 September 2023

அதிமுக சார்பில் படப்பள்ளி பூத் கமிட்டியின் பூத் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியின் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி அதிமுகவின் பூத் கமிட்டியின் பூத்  அலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இதில் அதிமுகவின் மாவட்ட துணை செயலாளர் திரு ஷாகுல் அமீது, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு வேடி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக அவை தலைவர் திரு சுப்பிரமணி, ஊத்தங்கரை வடக்கு திமுக ஒன்றிய துணை செயலாளர் திரு தண்டபாணி, முன்னாள் உப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு சுவாமிநாதன், மாறம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திரு கண்ணன், முன்னாள் கெங்கபிராம்பட்டி கவுன்சிலர் திரு.ராமசாமி, படப்பள்ளி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, ஒவ்வொரு பூத்திலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, அவர்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தை திறம்பட மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


கூட்டத்தில் பேசிய மாவட்ட துணை செயலாளர் திரு ஷாகுல் அமீது, "ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் உள்ள வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை திறம்பட மேற்கொள்வதற்கான திட்டங்களை தயாரித்து செயல்படுத்த வேண்டும்" என்று பேசினார்.


ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு வேடி, "நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியும்" என்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைப்பதாக உறுதியளித்தனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad