இது தொடர்கதையாக நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்தால், வாகனத்தை பதிவு செய்ய மறுப்பதாக ஊழியர்கள் கூறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனம் வாங்க லட்ச ரூபாய் செலவு செய்ய தெரிந்தவர்களுக்கு ₹500 ரூபாய் கொடுப்பதற்கு என்ன குறை என்று ஊழியர்கள் கேட்பதாகவும், இது அவமானகரமான நிலையை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஒருசிலர் தங்களது நண்பர்களையோ ஏஜெண்டையோ நம்பி பதிவு செய்ய அனுப்பும்போது, அவர்களிடம் ₹500 ரூபாய் கேட்கும் போது உதவ வந்தவருக்கு அவமானம் ஏற்படுகிறது. எந்த அரசு கொடிகாசு ₹500 செலுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியீட்டுள்ளது தெரியவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கொடி வசூலால் நாட்டுபற்றுடன் உதவ வருகிறவர்கள் கொடி நாள் மீது இருக்கும் நம்பிக்கை சீர்குழைகிறது.
இதுபோன்ற அரசு அதிகாரிகளால் ஏற்படுவது அரசுக்கு தலைகுனிவு என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.
No comments:
Post a Comment