கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களரபதி ஊராட்சி இந்த ஊராட்சியில் அதிக குப்பைகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள்வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் அவர்களுக்கு புகார் மனு அளித்துள்ள நிலையில் நேரில் சென்று களரபதி ஊராட்சியை ஆய்வு மேற்கொண்ட போது சமூக ஆர்வலர் கொடுத்த புகார் உண்மை என்று தெரிந்த நிலையில் அவர் ஊராட்சி செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய இருவரும் நேரில் வந்து குப்பைகளை அகற்றினால் தான் நான் இங்கிருந்து செல்வேன் என்று நடுரோட்டில் அமர்ந்து குப்பைகளை அகற்றும் வரை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரை போன்ற மனித நேயம் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திறமையாக செயல்பட்டால் மறைந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மற்றும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது போல் இந்தியா எப்போது தேவல்லரசு நாடாக ஆகியிருக்கும் என்பது பொதுமக்களிடையே பேச்சாக நிலவி வருகிறது எனவே இவருக்கு மத்தூர் ஒன்றியத்தில் குவியும் பொதுமக்கள் பாராட்டிற்கு ஏற்ப அந்தேரிப்பட்டி ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் இது போன்ற செயலில் ஈடுபடுவாரா என்பது அந்தேரிப்பட்டி ஊராட்சியில் இருக்கும் பொது மக்களின் எதிர்பார்ப்பும் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாகவும் உள்ளது நேரில் வந்து ஆய்வு செய்வாரா?????
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்.
No comments:
Post a Comment