சிங்காரப்பேட்டை அடுத்த மிட்டப்பள்ளியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 24 October 2023

சிங்காரப்பேட்டை அடுத்த மிட்டப்பள்ளியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் சிங்காரப்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட மிட்டப்பள்ளி ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கை ஏற்று மிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதாய்ஏற்பாட்டில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

சிங்காரபேட்டை காவல் ஆய்வாளர் சந்திர குமார்  தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணிகுமரேசன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் எக்கூா் செல்வம், மூன்றம்பட்டி எஸ்.குமரேசன், ரஜினி செல்வம், பேரூா் செயலாளர் பாபுசிவக்குமாா், மாவட்ட மகளிர் அணி மற்றும் வலைதள பொறுப்பாளர் மணிமொழி ஆசை தம்பி, இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர், லயோலா ராஜ சேகர், அவை தலைவர், தணிகை குமரன், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.


- கிருஷ்ணகிரி மாவட்டசெய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad