பாம்பார் அணை பகுதியில் ஈச்சர் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் பலி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 25 October 2023

பாம்பார் அணை பகுதியில் ஈச்சர் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் பலி.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் இருசக்கர வாகனம் இது ஈச்சர் வாகன மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

திருவண்ணாமலை பகுதியில் செயல்பட்டு வரும் கலை ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊறுகாய் வியாபாரம் செய்ய வந்த ஈச்சர் வாகனம் பாம்பாறு அணை பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது வலது புறம் உள்ள முன் பகுதி டயர் வெடித்து விபத்துக்குள்ளானது இதில் இடது புறமாக சென்ற வாகனம் திடீரென வலது புறமாக திரும்பியது எதிர்திசையில் ஊத்தங்கரை பகுதியில் இருந்து சிங்காரப்பேட்டை  அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்சிங்(30), குமார் வயது (55), என்ற இருவர் ஊத்தங்கரை பகுதியில் இருந்து சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது பஞ்சர் ஆகிய ஈச்சர் வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இதில் சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் ஈச்சர் வாகனம் கவிழ்ந்ததில் வாகனத்தை ஓட்டி வந்த குமார் என்பவர் ஈச்சர் வாகனத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில் பின்னால் உட்கார்ந்து இருந்த குமார் என்பவர் தூக்கி வீசப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார் அருகில் இருந்த நபர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்ததில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊத்தங்கரை காவல்துறையினர் சம்பவப் பகுதியில் இருந்த பீன்ஸின் என்ற நபரின் உடலை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உடன் வந்த நபர் காணவில்லை என தேடி வந்தனர் விபத்துக்கு உள்ளான ஈச்சர் வாகனத்தை ஜேசிபி உதவியுடன் நகர்த்தி பார்த்ததில் குமார் என்பவரின் சடலம் விபத்துக்குள்ளான ஈச்சர் வாகனத்தின் அடியில் இருந்தது இரண்டு உடல்களையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் ஈச்சர் வாகனம் திருவண்ணாமலை பகுதியில் கலைஊறுகாய் நிறுவனம் நடத்தி வந்ததாகவும் விபத்து ஏற்பட்ட பகுதியில் ஓட்டுநர் தப்பித்து ஓடிவிட்ட நிலையில் அருகிலிருந்த நபர்கள் அவரைப் பிடித்து ஊத்தங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், இருசக்கர வாகனம் மற்றும் ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad