ஊத்தங்கரை வட்டம், மத்தூர் ஒன்றியம் சாலூர் அடுத்த முக்கிரம்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் திருப்பதி என்பவரின் வீட்டின் அருகில் ஒரு மின்கம்பமும் மற்றும் ராமஜெயம் வீட்டின் அருகில் ஒரு மின்கம்பமும் எலும்பு கூடுபோல் நீண்ட நாளாக உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த ஒற்றையடி பாதை வழியாகத்தான் பிரதான நெடுஞ்சாலைக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்பொழுது, தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் முறையாக பராமரிப்பு செய்ய தவறியது இந்த மின்கம்பத்தின் தற்போதைய நிலைக்கு காரணம் என்பது குறிப்பிட்டுள்ளது,
மேலும் பருவமழை தொடங்கும் நிலையில் இது போன்ற மின்கம்பங்கள் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பல உயிர் இழப்பு ஏற்படும், எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இது போன்ற மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு என கூறினர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்எ ஸ் சத்தியநாராயணன்
No comments:
Post a Comment