நமது தமிழ் குரல் செய்தியின் எதிரொலியால் ஆபத்தான நிலையிலிருந்த மின்கம்பங்கள் மாற்றம்!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 31 October 2023

நமது தமிழ் குரல் செய்தியின் எதிரொலியால் ஆபத்தான நிலையிலிருந்த மின்கம்பங்கள் மாற்றம்!!


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கே.எட்டிப்பட்டி ஊராட்சி உட்பட்ட  சாலூர் அடுத்த முக்கிரம்பள்ளி  கிராமத்தில் வசித்து வரும் திருப்பதி என்பவரின் வீட்டின் அருகில் ஒரு மின்கம்பமும்  ராமஜெயம் என்பவரின் வீட்டின்  அருகில் ஒரு மின்கம்பமும் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல்  நீண்ட நாளாக  இருந்து வந்தது, இது குறித்து நமது தமிழ் குரல் இணையதளத்தில் கடந்த ஞாயிறு அன்று செய்தி வெளியிட்ட நிலையில் சிதிலமடைந்த கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதற்கு அங்கு இருக்கும் கிராம பொதுமக்கள் நமது தமிழககுரல் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் அப்பகுதி மக்கள்.

 

- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad